எமது சேவை வழங்கல்கள் மூலமாக தகவல் தொடர்பாடல் மற்றும் அறிவுச் செழுமை மிக்க சமுதாயத்தை நோக்கி இலங்கையை வழிநடாத்தல்
எமது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஒவ்வொரு ஊழியரும் தன் பங்களிப்பை ஆற்றவேண்டி உள்ளதுடன் எமது நோக்கங்களில் நாம் கவனஞ்செலுத்தி உண்மையில் வலிமைமிக்க வெற்றிகரமான ஒரு நிறுவனமாக நாம் தொடர்ந்தும் திகழ்வதில் எமக்கு உதவ வேண்டும்.
அக்கறை, பகிர்வு மற்றும் விநியோகம்
எம்முடன் தொடர்புபட்ட தரப்பினர், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான எமது உறவுமுறையில் இவை மூன்றும் முக்கிய உள்ளடக்கங்களாக உள்ளன. தனிப்பட்ட ரீதியிலும், அணியாகவும் இந்த மூன்று கொள்கைகள் மீதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதனாலும் அதன் மூலம் நிறுவன மட்டத்தில் அதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதனாலும் எமது குறிக்கோளை முன்னெடுப்பனை நாம் உண்மையில் அடைந்துகொள்ள முடியும்.